வியாழன், 24 டிசம்பர், 2015

இந்தப் பதிவு எவ்விதத்திலும் அணுஉலைக்கு ஆதரவாகவோ
எதிர்ப்பாகவோ இல்லை. அப்படி எவ்விதத் தொனியும்
இதில் இல்லை. அணுஉலை ஆதரவு-எதிர்ப்பு என்பது
முற்றிலும் வேறுபட்ட விஷயம்.
**
இந்த வழக்குகள் குறித்தும் மக்களின் அலைக்கழிப்பு
குறித்தும் நான் நிரம்பவே அறிவேன். தோழர் முகிலனையும்
நான் நன்கறிவேன். திடீரென்று அவர் முடிவு எடுக்கவில்லை.
இரண்டு மூன்று மாதங்களாகவே அவர் இந்த வழக்குகள்
குறித்து தொடர்புடைய அனைவரிடமும் பேசி வந்தார்.
அவரின் முடிவு ரகசிய முடிவல்ல.
**
மக்களுக்காக ஒரு முடிவு எடுத்து சிறை சென்று இருக்கக் கூடிய
தோழர் முகிலன் பாராட்டுக்கு உரியவர்.
**
முகிலன் மா-லெ இயக்கத்தில் எங்களைப் போன்ற பலருடன்
தம்மையும் இணைத்துக் கொண்டவர். ஆனால் உதயகுமாரோ
தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர். இந்த முரண்பாடு முக்கியமானது.
சாதாரண குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரால்
இதைப் புரிந்து கொள்ள முடியாமல் போகக்கூடும்.
**
மாதம் ஓரிரு முறை நான் நெல்லை செல்லக் கூடியவன்.
ஏனெனில் அது என்னூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக