செவ்வாய், 8 டிசம்பர், 2015

தமது பங்களாவில் குடிசைவாசிகளை அனுமதித்து
ஆதரித்த உலக சதுரங்க சாம்பியன் ஆனந்த் வாழ்க!
அறிவுஜீவி என்பவன் ஒரு முழுநேர இடதுசாரியே!
---------------------------------------------------------------------------------
தற்போது லண்டனில் உலக சதுரங்கப் போட்டிகளில்
பங்கேற்றுக் கொண்டு உள்ளார் விஸ்வநாதன் ஆனந்த்.
சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள
அவரின் வீட்டில், வெள்ள பாதிப்புக்கு இலக்கான
அருகில் உள்ள குடிசைவாசிகள் இருபது பேர், இரண்டு
கர்ப்பிணிப் பெண்கள் உட்பட, தங்கியுள்ளனர்.

அதிக அளவில் உணவு சமைத்து ஆனந்த்தின் வீட்டில்
தங்கி உள்ளோருக்கும் மற்றும் அருகில் உள்ள
குடிசைவாசிகளுக்கும் வழங்கி வருகிறார் ஆனந்த்தின்
மனைவி அருணா. போட்டிகள் முடிந்து  சென்னை
திரும்பியதும் வெள்ள  நிவாரண நிதியை ஆனந்த்
அறிவிப்பார் என்று திருமதி அருணா மேலும் கூறினார்.

"அறிவுஜீவி என்பவன் ஒரு முழுநேர இடதுசாரி" என்றார்
பிரெஞ்சு மார்க்சிய அறிஞர் ஜீன் பால் சார்த்தர். ஆனந்த்தின்
நடத்தை இதை நிரூபிக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக