சனி, 19 டிசம்பர், 2015

தடையை மீறி ஆர்ப்பாட்டம் என்ற இந்தப் போராட்டத்துக்காக
நடைபெற்ற ஆயத்தக் கூட்டத்திற்கு தோழர் வி.பி.சிந்தன்
வருவதாக இருந்தது. ஆனால் ஏனோ, வி.பி.சி அவர்கள்
வரவில்லை. அதற்குப் பதிலாக தோழர் VMS
(வே மீனாட்சி சுந்தரம், மார்க்சிஸ்ட் கட்சி) வந்தார்.
வீரவுரை ஆற்றினார். ஆனால் அவரின் ஆதரவாளர்கள்
(CPM Group) போராட்டம் நடந்த தொழிலாளர் நல ஆணையர்
அலுவலகம் பக்கமே வரவில்லை. இது ஏன்? ஏன் M GROUP
ஆட்கள் போராட்டத்தைச் சீர்குலைத்தனர் என்பது
எனக்கு நினைவில்லை.


தோழர் VKG அவர்களே,
ஜாமீன் பெறுவதற்காக தாங்கள் ஆற்றிய கடும்பணி குறித்து
பின்னர்தான் நான் தெரிந்து கொண்டேன். தங்களைத் தெரிவு
செய்து தோழர் ஜெகன் அவர்கள் தங்களிடம் அப்பணியை
ஒப்படைத்தது மிகச் சிறந்த தேர்வு. இது ஜெகனின் தலைமைப்
பண்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டு. 124A சட்டத்தை உடைத்ததில்
தங்களின் (தோழர் VKG) பங்கு மகத்தானது. 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக