வியாழன், 24 டிசம்பர், 2015

தங்களின் பதிவு உதயகுமாரின் கள்ள மௌனம் குறித்து
எதுவும் குறிப்பிடாமல் இருப்பது வருத்தம் தருகிறது.
வாய்தா வாய்தா என்று மாதத்தில் 20 நாட்கள் கூடங்குளம்
போராட்டக்காரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக நேரிடுகிறது.
இதனால் அவர்களின் பிழைப்பு பாதிக்கப் படுகிறது.
ஆனால், போராட்டத் தலைமையில் உள்ள உதயகுமாரும்
பாதிரியார் மை பா ஜெசுராஜனும், மக்களைப் பற்றிக்
கவலை கொள்ளாமல் அலட்சியமாக இருக்கிறார்கள்.
** 
தோழர் முகிலன் முன்பு மார்க்சிய லெனினிய இயக்கத்தில்
பணியாற்றியவர். எனவே அவர் சிறை செல்ல அஞ்சியதில்லை;
அஞ்சுவதும் இல்லை. ஆனால் உதயகுமாரோ தொடக்கம்
முதலே கம்யூனிச எதிர்ப்பாளர். சொகுசு வாழ்க்கையில்
இருந்து அவரால் விடுபட முடியாது.
**
"கஷ்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்
மார்க்சிஸ்டுகள் நாங்கள் லெனினிஸ்டுகள்"
என்ற மார்க்சிய-லெனினிய இயக்கப் பாடலை
இப்பொழுதில் நினைவுபடுத்திப் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக