திங்கள், 28 டிசம்பர், 2015

அழித்தொழிப்பைச் செய்தவர்கள் நக்சல்பாரிகள் மட்டுமே!
--------------------------------------------------------------------------------------------
1) பண்ணையார் கோபால கிருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது
நக்சல்பாரி எனப்படும் மார்க்சிய லெனினிய இயக்கமே.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  மா-லெ (வினோத் மிஸ்ரா)
கட்சியே இந்த அழித்தொழிப்பைச் செய்தது.
**
2) திராவிடர் கழகத்திற்கும் இந்த அழித்தொழிப்பிற்கும்
எவ்வித சம்பந்தமும் இல்லை.
3) வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பது என்பதை ஒரு
கோட்பாடாகக் கொண்டு அதை செயல்படுத்தி வந்தது
நகசல்பாரிகளே. திராவிடர் கழகம் போன்ற முற்போக்கான
அமைப்புகள், பண்பாட்டுத் தளத்தில் மட்டும் செயல்படும்
சட்டபூர்வமான அமைப்புகள். அழித்தொழிப்பு என்பது
அவர்களின் சிந்தனையிலோ செயல்திட்டத்திலோ
கிடையாது.ஏன், கற்பனையில் கூடக் கிடையாது.
**
4) மா-லெ கட்சியினர், கோபாலகிருஷ்ண நாயுடுவை
அழித்தொழிப்பது என்று கட்சிரீதியாக முடிவு எடுத்தனர்.
பின்னர் இம்முடிவை நிறைவேற்றுவதற்காக, கொரில்லா
குழுக்களைக் கட்டி அமைத்தனர். திட்டத்தைச்  செயல்படுத்த
தகுந்த நாளுக்காகக் காத்திருந்தனர்.
**
5) அந்த நாளும் வந்தது. எப்போதும் தன்னிடம் வைத்திருக்கும்
துப்பாக்கியை லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டி, நாயுடு
காவல் துறையிடம் ஒப்படைத்து இருந்தார். அந்தத் தகவலை
உறுதி செய்து கொண்ட கொரில்லா குழுவினர் அன்றைய நாளில்
அவரை அழித்தொழிப்புச் செய்தனர்.
**
6) அழித்தொழிப்பு முடிந்ததும் கட்சியின் கட்டளைப்படி,
அனைவரும் தலைமறைவு ஆயினர். காவல்துறையும்
உளவுத் துறையும் அவர்களைப் பிடிக்க முடியாமல்,
அந்தப்  பகுதியில் உள்ள, அழித்தொழிப்பில் ஈடுபடாத
சாதாரண ஆதரவாளர்களைப் பிடித்துச் சிறையில்
அடைத்தனர். தகுந்த சாட்சியம் இல்லை என்பதால்,
பின்னர் அனைவரும் விடுதலை ஆயினர்.
**
7) ஒரு மூன்றாம் மனிதனாக இருந்து கொண்டு நான் இதைச்
சொல்லவில்லை என்றும்  அழித்தொழிப்பு நடைபெற்ற அந்த
1980ஆம் ஆண்டில், அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றியவன்
என்ற அடிப்படையிலும், நாயுடுவின் அழித்தொழிப்பை
நக்சல்பாரி இயக்கம் மட்டுமே செய்தது என்று உறுதிபடக்
கூறுகிறேன்.
**
8) பொதுவெளியில் இடப்படும் ஒரு பதிவு அல்லது
பின்னூட்டத்தில், இதற்கு மேல் சொல்ல முடியாது
என்பதையும் நக்சல்பாரிகள் அறிவார்கள்.
9) அழித்தொழிப்பு என்பதெல்லாம் இரும்பு அடிக்கிற
இடம். அங்கே திராவிடர் கழகம் போன்ற ஈக்களுக்கு
என்ன வேலை?
**
10) பெரியாரைப் போற்றுவோம்! வணங்குவோம்! அதே
நேரத்தில் பெரியா வெறும் பண்பாட்டுத் தளச்
செயல்பாட்டாளர் மட்டுமே. பெரியாரியம் மானுட
விடுதலையைப் பெற்றுத் தராது. அதை மார்க்சிய
லெனினியம் மட்டுமே பெற்றுத் தரும்.  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக