ஞாயிறு, 29 ஜூலை, 2018

materialism
----------------
chengo
பொருள் கருத்தை உருவாக்கும் முன் எல்லாமே பொருட்களின் இயல்பான இயங்கியல்தான். அதனையே இயற்கை என்கிறோம்.

பொருளின் இயல்பான வளர்ச்சியால், தற்செயல்/ வாய்ப்பு அல்லது தற்போது நமது புலனுணர்வால் உணர முடியாத கடவுளற்ற எதோ ஒன்றால், உயிர் 
உருவான போதே, அதனிடம் அறிவின், கருத்தின் அடிப்படையும் உருவாயிற்று.

அந்த ஆதியுயிர் அமீபாவின் சக்தி வளர வளர, அதனை ஒட்டியுள்ள, நுண்ணிய பொருள்களையும், அலைகளையும் அலைகளையும் அது ஆளுமை செய்து, அப்பொருட்களை ஆளுமை செய்து அமீபா வளர ஆரம்பித்து, இன்றைய மனித நிலையை அடைந்தாயிற்று.

இப்போது நாம் உயிர்கள் தோன்றுவதற்குகு முன் பின் என்றுதான் உலகத்தை பிரித்து பார்த்து உலகை புரிந்துகொள்ள வேண்டும்.

இதனை லாறன்ஸ் லான்சா என்ற உயிரியல் அறிஞர், பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதம் என்பதெல்லாம் சரியல்ல, பொருளில் இருந்து எப்போது உயிர் தோன்றியதோ, அதனை த்தான் மையமாக வைத்து உலகை உணர வேண்டும் என்கிறார். அதனை அவர் உயிர் மைய வாதம் என்கிறார்.

பொருள் முதல் வாதமும், உயிர்மைய வாதமுஅ அடிப்படையில் எதிர் எதிரானவையல்ல என்கிறார் எம்.ஆர்.ஐயர். அதாவது மார்க்சீயம் உயிருக்கு அல்லது கருத்துக்கு முந்தையது பொருள் என்கிறது. 

ஆனால் லாறன்ஸ் லான்சா என்ன சொல்கிறார் என்றால் ஆதியந்தமற்றது தான் பொருள் என்றால், எது முதல் என்று பார்ப்பதை விட, எதை மையமாக வைத்து பார்த்தால், எல்லாவற்றையும் எளிதாக பார்க்கலாம் என்கிறார். எம்.ஆர்.ஐயர் எந்த வகையில் பார்த்தாலும் இரண்டும் ஒன்றே என்கிறார்.

இதனை புரிந்துக் கொண்டால், உயிரும் கருத்தும் தோன்றும் முன் கருத்து என்ற ஒன்று இல்லை என்பதும், உயிரும் கருத்தும் பொருட்களை அதனதன் சக்திக்கு உட்பட்டு ஆள்கிறது என்பது, தாங்கள் சொல்வது மாதிரி நடக்கிறது என்பதும் உண்மை என்று உறுதியாக கூற முடியும்.

இப்போது இங்கு நடக்கும் விவாதத்தின் முக்கிய பிரச்சினையே, கருத்து எப்போதும் பொருட்களை ஆளும் என்று தாங்கள் கருதுவதாக தெரிகிறது.

இதற்கு மாறாக Sumathi Venkatachalapathy அவர்கள், கருத்து எப்போதுமே பொருட்களை ஆள முடியாது என்று கருதுவதாக தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டு கருத்துக்களும் தவறு.

தாங்கள், பொருளிலிருந்து உயிரும் கருத்தும் உருவான பின்,
அந்த உயிரும் அதன் கருத்தும் பொருட்களை ஆளும் என்று தெளிவாக விளக்கினால், அவர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக