திங்கள், 23 ஜூலை, 2018

கார்த்திகேயனின் மாதவிடாய்!
இவருக்காக கண்ணீர் சிந்த வேண்டிய தேவை இல்லை!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
புதிய தலைமுறை தொலைக்காட்சியின்
ஊடகவியலாளர் திரு கார்த்திகேயன்
ஒரே நாள் இரவில் பெரும் நாத்திகராக(!!!) புகழ்
பெற்று விட்டார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ராஜிவ் கொலைச்சதி
புகழ் சந்திரா சாமி என்னும் சாமியார் பிள்ளையார்
பால் குடிப்பதாக ஒரு தேசியப் பொய்யை
ஒரே நாளில் கிளப்பி விட்டார். நாடே அதன்
தாக்கத்திற்கு உள்ளாகிச் சீரழிந்தது.

தற்போது நவீன சந்திராசாமி ஆகிய கார்த்திகேயன் 
பெண் தெய்வங்களுக்கு மாதவிடாய்
வருமா என்ற கேள்வியை எழுப்பி  தமிழ்நாட்டில்
ஒரு மாநிலப் பொய்யைக் கிளப்பி விட்டுள்ளார்.

இதன் மூலம்  தமிழ்நாட்டின் பிரபல நாத்திகர்
என்ற போலிக் கிரீடத்தை தன் தலையில்  தானே
அணிந்து கொண்டுள்ளார்.

திரு கார்த்திகேயன் நாத்திகரோ
பொருள்முதல்வாதியோ அல்ல. பொருள்முதல்வாதம்
கருத்துமுதல்வாதம் போன்ற தத்துவங்களை
அவர் அறிந்ததுகூடக் கிடையாது. அவை அவரின்
அறிவெல்லைக்கு அப்பாற்பட்டவை.

பால் குடிப்பதும் மாதவிடாய் வருவதும்
உயிரினங்களின் பண்பு. மாதவிடாய் என்பது
மனித இனத்தில் பெண்களுக்கு உரிய
உடற்கூறு சார்ந்த நிகழ்வு. சிம்பன்சி வகை
மனிதக் குரங்கினத்தில் பெண் குரங்குகளுக்கு
மாத  விடாய் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள்
வெளியாகி உள்ளன.

மனிதன் மட்டுமின்றி, நாய் பூனை போன்ற
பாலூட்டிகளும் பால் குடிப்பது உண்டு. பாலூட்டி
இனம் பற்றிய உயிரியல் பாடங்களை வாசகர்கள்
படிப்பதன் மூலமே பால் குடித்தல் பற்றித்
தெளிவு பெற இயலும்.

கார்த்திகேயன் எதையும் நிரூபிக்கவில்லை.
இதற்கு மாறாக, இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்
தலைவர் தோழர் சனல் இடமருகு, மும்பையில்
மதவாதிகளின் ஒரு உரிமை கோரலை பொய்
என்று நிரூபித்தார். கிறிஸ்துவ மதவாதிகள்
அவர் மீது தாக்குதல் தொடுத்ததால், அவர்
இந்தியாவில் எங்குமே வாழ முடியாமல்,
பின்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறார்/

2013ல் சனல் இடமருகு அவர்கள் மதவாதிகளின்
எதிர்ப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல்  திணறியபோது
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே மொத்தத்
தமிழ்நாட்டிலும் அவருக்கு ஆதரவாக நின்றது.

சனல் இடமருகு அவர்கள் உறுதியான பகுத்தறிவாளர்.
மதவாதிகளின் போலித்தனங்களை அம்பலப்
படுத்தி முறியடித்தவர். இந்தியச் சமூகம் அவரைப்
பாதுகாக்கவில்லை.

ஆனால் திரு கார்த்திகேயன் போன்ற
போலிகள் மெய்யான பொருள்முதல்வாதிகளுக்கு
உரிய இடத்தை அபகரித்துக் கொள்ளும்
அற்பர்கள். இவரைப் போன்ற போலிகள் மெய்யான
பொருள்முதல்வாதத்திற்கு மாற்றாக, போலியான
வெற்று ஆரவாரத்தை முன்வைப்பவர்கள். இதன்
மூலம் திரளான மக்களை  கருத்துமுதல்வாதத்தின்
பிடிக்குள், மதத்தின் பிடிக்குள் தள்ளி விடுபவர்கள்.
இத்தகைய போலிகள் மதவாதிகளை விட
சமூகத்திற்குத் தீங்கானவர்கள்.

சங்கப் பரிவாரங்கள் இத்தகைய போலிகளை
அடித்து உதைப்பார்கள் என்றால், இத்தகைய
போலிகளுக்காக பொருள்முதல்வாதிகள்
கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லை.
***************************************************               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக