வெள்ளி, 20 ஜூலை, 2018

அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியையும், அதனடிப்படையில் தர்க்கவியலில் ஏற்படும் வளர்ச்சியையும் மார்க்சீயர்கள் உடனுக்குடன் புரிந்துக் கொண்டு, பொருள் முதல் வாதத்தை நுண்ணிய அளவில் விளக்கா விட்டால், கருத்து முதல் வாதிகள், பொருள் முதல் வாதத்தை குழப்பமுயல்வார்கள். எனவே தான் மார்க்சீயர்கள் அறிவியல் தொழில் நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இத்தகைய பதிவுகளும் விவாதங்களும் இன்னும் ஆழமாக அதற்கான தளங்களில் நடத்தப் பட வேண்டும் என்று பல்லாண்டுகளாக கூறி வருகிறோம்.

இதனை செய்யாமல் இருந்தால் மார்க்சீயர்களும், புரட்சியாளர்களும் அறிவியல் தொழில் நுட்பத்திலும், தர்க்கத்திலும், தத்துவத்திலும் பின் தங்குவார்கள். அது அவர்கள் அரசியலிலும் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் நிரந்தரமாக பின்தங்குவதில் போய் முடியும். இப்போது இதுதான் படிப்படியாக நடந்து வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக