வியாழன், 26 ஜூலை, 2018

சரியான விடை:
---------------------------
1) இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று 

உத்தரவு போட்டவர் பிரதமர் வாஜ்பாய்.
(ஆண்டு 2000)
2) வாஜ்பாய் போட்ட உத்தரவை ரத்து செய்து 
இடஒதுக்கீடு வேண்டாம் என்று உத்தரவு 
போட்டவர் மன்மோகன் சிங் ( ஆண்டு 2005)

=======================================



யாரோ அவர் யாரோ?
விடை சொல்லுங்கள்!
சரியான விடை சொன்னால் கௌரவம்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------
இந்தியாவில் LPG கொள்கைகள்
(தனியார்மயம் தாராளமயம் உலகமயம்)
செயல்பட்டு வருகின்றன. உலக வர்த்தகக்
கழகத்தில் (WTO) இந்தியா சேர்ந்துள்ளது.
நரசிம்மராவ் பிரதமராகவும் பிரணாப் முகர்ஜி
வணிகத் துறை அமைச்சராகவும் இருந்தபோது
இது நடந்தது. இப்போது கேள்வி இதுதான்!
கேள்வி-1: வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள்
இந்தியாவில் கல்வி வழங்கும்போது, இந்தியாவில்
நடைமுறையில் உள்ள, SC, ST, BC இட ஒதுக்கீடு
முறையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்
என்று உத்தரவிட்ட இந்தியப் பிரதமர் யார்?
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
-----------------------------------------------------------------------
அ) நரசிம்மராவ்
ஆ) வி.பி.சிங்
இ) வாஜ்பாய்
ஈ)தேவகவுடா
--------------------------------------------------------------------------------------------
கேள்வி-2: அந்த உத்தரவை ரத்து செய்து, வெளிநாட்டுப்
பல்கலைகள் இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை
என்று உத்தரவிட்ட இந்தியப் பிரதமர் யார்?
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
-------------------------------------------------------------------------
அ) நரேந்திர மோடி
ஆ) வாஜ்பாய்
இ) ராஜிவ் காந்தி
ஈ) மன்மோகன் சிங்.
விடைகளைச் சொல்லுங்கள்!
---------------------------------------------------------------------------------------------------
(சென்னையில் நடைபெற்ற (24.07.2016) புதிய கல்விக்
கொள்கை குறித்த கருத்தரங்கில் பேசும்போது,
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர் அவையோரிடம்
கேட்ட கேள்வி இது.)
*********************************************************************

Affirmative action என்றால் என்ன?
Affirmative action அடிபட்டுப் போகிறதாமே, உண்மையா?
கபாலித் தொழுநோயாளிகள் உணர்வார்களா?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------
WTO என்னும் உலக வர்த்தகக் கழகம் குறித்துப்
பேசுகிறபோதெல்லாம் Affirmative action என்பது
குறித்தும் பேச நேர்கிறது. குறிப்பாக புதிய கல்விக்
கொள்கை குறித்துப் பேசும்போதெல்லாம்
Affirmative action குறித்தும் அது அடிபட்டுப் போகும்
என்பது குறித்தும் பேச வேண்டிய தேவை எழுகிறது.
Affirmative action என்றால் என்ன? அது ஏன் எப்படி
அடிபட்டுப் போகிறது? அதாவது பாதிப்பு அடைகிறது?
புதிய கல்விக் கொள்கைக்கும் Affirmative actionக்கும்
என்ன தொடர்பு? அப்படியே Affirmative action அடிபட்டுப்
போனால்தான் என்ன? அதனால் என்ன குடியா
முழுகி விடப் போகிறது?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எட்டுக் கோடித்
தமிழர்களுக்கும் விடை தெரிய வேண்டும்.
ஆனால் அடையாள அரசியல் என்னும் க்ஷய ரோகமும்
கபாலித் தொழுநோயும் பீடித்திருக்கக்
கூடிய தமிழ்ச் சமூகத்தில் இதைப்பற்றி அக்கறை
கொள்ள நாதி கிடையாது.
சமூக ரீதியாக மிகவும் வறுமையிலும் பின்தங்கிய
நிலையிலும் இருக்கிற பிரிவினருக்கு சில
சலுகைகள் வழங்குவதன் மூலமாக, அவர்களை
உயர்த்தும் நடவடிக்கைகளே Affirmative action எனப்படும்.
தீவிர முயற்சி என்று தமிழில் கூறலாம்.
எடுத்துக் காட்டாக SC, ST வகுப்பினருக்கு, இன்ன
பிறருக்கு மத்திய மாநில அரசுகள் இட ஒதுக்கீடு
வழங்குகின்றன. இந்த இட ஒதுக்கீடு Affirmative action
ஆகும்.
அண்மையில், IIT படிப்புக்கான கல்விக் கட்டணத்தை
(TUTION FEES) ரூ 90,000 இல் இருந்து ரூ இரண்டு லட்சமாக
மத்திய அரசு உயர்த்தியது. ஆனால் இந்தக் கட்டண
உயர்வு SC,ST மாணவர்களுக்கு கிடையாது என்றும்
அவர்கள் பழைய கட்டணத்தையே செலுத்தலாம்
என்றும் அரசு கூறியது. இது Affirmative actionக்கு
நல்ல உதாரணம் ஆகும்.
***************************************************************
(சென்னையில் நடைபெற்ற (24.07.2016, ஞாயிறு மாலை)
புதிய கல்விக் கொள்கை பற்றிய கருத்தரங்கில்
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர் தோழர்
பி இளங்கோ சுப்பிரமணியன் அவர்கள் பேசியது) 
======================================================
தமிழ்வழிக்கல்வி என்று போலிக் கூச்சலிடும்
குட்டி முதலாளித்துவத் தற்குறிகளின் 
உடம்பில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் 
 சூடு போட வேண்டும், ஏன்?
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------- 
நீள்வட்டப் பாதையில் புவியைச் சுற்றி வரும் ஒரு 
செயற்கைக்கோளின் புவிச்சேய்மை  30,000 கிமீ  
ஆகவும் புவியண்மை 1000 கிமீ ஆகவும் உள்ளதெனில்,
நீள்வட்டச் சுற்றுப்பாதையின் அரைப்பேரச்சின்  
நீளம் காண்க.

கேள்வி  ஆங்கிலத்தில் பின் வருமாறு:-
A satellite in an elliptical orbit has an apogee of 30,000 km and 
a perigee of 1000 km.Determine the length of the semi major axis of the 
elliptical orbit.

தமிழில் உள்ள கேள்வியைப் புரிந்து கொள்ள வசதியாக 
பின்வருமாறு எளிமையாகச் சொல்கிறேன்: 

ஒரு செயற்கைக்கோள் நீள்வட்டப் பாதையில் பூமியைச் 
சுற்றி வருகிறது. பூமிக்கு அருகில் வந்தபோது அது 
பூமியில் இருந்து 1000 கிமீ தொலைவில் இருந்தது.
பூமிக்கு அப்பால்  சென்றபோது அது பூமியில் இருந்து 
30,000 கிமீ தொலைவில் இருந்தது. அப்படியானால்,
அந்த நீள்வட்டச் சுற்றுப்பாதையின் பெரிய அச்சில் 
(major axis) பாதியானது எவ்வளவு இருக்கும்?

Annotation:
--------------- 
இது 12 வகுப்புக்கு உட்பட்ட பாடம் அல்ல. Communication 
Engineeringல் உள்ள பாடம். இது தமிழில் இல்லை. வாசகர்கள் 
புரியும்படியாக நான் கேள்வியைத் தமிழாக்கி உள்ளேன்.
சிறந்த அறிவியல் கலைச்சொற்களைக் கொண்ட 
என் கேள்வி புரியாமல் போய்விடக் கூடும் என்பதால்,
இந்தக் கேள்விக்கே ஒரு கோனார் உரை எழுதி உள்ளேன்.

தமிழ்வழிக் கல்வி என்பது இந்த லட்சணத்தில்தான் 
உள்ளது. Pre feudal காலத்து மொழியான தமிழ் 
Post feudal காலத்தின் வளர்ச்சிக்கு ஒருபோதும் 
ஈடு கொடுக்க இயலாது. இதுதான் உண்மை.   

இதை மறுப்பவர் யார்  எவராயினும் அவர்கள் 
தங்கள் கூற்றை நிரூபிக்க வேண்டும். எனது கூற்றை 
என்னால் நிரூபிக்க இயலும். 

எனவே தமிழ் தமிழ் என்றும் தமிழ் வழிக்கல்வி என்றும் 
கூச்சலிடும் தற்குறிகள் இந்தக் கேள்வியைப் 
படிக்க வேண்டும். அவர்கள் இந்தக் கணக்கைச் 
செய்ய வேண்டாம். ஆனால் தமிழில் அறிவியல் 
கல்வி என்பது எவ்வளவு தூரம் சாத்தியம் அல்லது 
சாத்தியம் இல்லை என்று புரிந்து கொள்ள 
விரும்புவோர் இந்தக் கேள்வியைப் படிக்க வேண்டும்.

புவிச்சேய்மை  (apogee) புவியண்மை (perigee) ஆகிய 
கலைச்சொற்களை உருவாக்கி உள்ளேன். (இவை 
ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டன என்று 
எவராவது துப்பறிந்து கூறினாலும் அதுபற்றி 
எனக்குக் கவலையில்லை. இச்சொற்களைப்  
பல ஆண்டுகளாகவே நான் மனதில் கருதி வந்துள்ளேன்).

இந்தக் கணக்கு Communication Engineering Syllabusல் 
பாடப்புத்தகத்தில் உள்ள கணக்கு என்றாலும் கூட,
ஒரு 11 அல்லது 12ஆம் வகுப்பு மாணாவனால் 
இக்கணக்கை எளிதில் செய்ய முடியும். நீள்வட்டம் 
(ellipse) பற்றிய பாடம் 11ஆம் வகுப்பிலேயே வந்து 
விடுகிறது. semi major axis கண்டுபிடிப்பது எளிய 
கணக்கு. apogee perigee பற்றி இயற்பியல் பாடத்தில் 
வந்து விடுகிறது.எனவே 11, 12 வகுப்பு மாணவனால் 
இதைச் செய்ய முடியும்.

கணிதப் பின்னணி இல்லாதோரும் இக்கணக்கைப் 
புரிந்து கொள்ள வசதியாக இத்துடன் ஒரு படம் 
வரைந்து, அதையும் இப்பதிவில் இணைத்துள்ளேன்.
படத்தைப் பார்க்கவும்.

1) விடைகள் வரவேற்கப் படுகின்றன.   
2) விடையளிக்க இயலாதோரிடம் இருந்து 
தமிழ்வழிக்கல்வி பற்றிய புரிதல் சார்ந்த 
 வரவேற்கப் படுகின்றன.
3) கவன  ஈர்ப்புக்காக அதிரடியான ஒரு தலைப்பு 
இப்பதிவுக்கு வைக்கப்படும். யாரையாவது வம்புக்கு 
இழுத்துத் தலைப்பு வைத்தால் (a provoking title)  
மட்டுமே குட்டி முதலாளித்துவம் குரைக்கும். 
இல்லையேல் புறக்கணித்து விட்டுப் போய்விடும்.
-------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இந்தக் கணக்கைச் செய்வது என்பதை விட,
செயற்கைக்கோள் குறித்து அறிந்து கொள்வது 
ஒவ்வொரு பொருள்முதல்வாதிக்கும் அவசியம் ஆகும்.
மானுட ஆற்றலின் பிரம்மாண்டத்தை அறியாதவன் 
பொருள்முதல்வாதியாக இருக்க முடியாது.
***************************************************************************   
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக