வெள்ளி, 6 ஜூலை, 2018

தமிழ் தேசியர்கள் விடையளிக்க வேண்டும்!
------------------------------------------------------------------------------
இது தமிழ் மணம் கமழும் கணக்கு. இதற்கு
விடையளிக்க வேண்டியது தமிழ் தேசிய இன
உணர்வாளர்களின் கடமை. விடையளிக்காவிடில்,
அவர்களின் தமிழ் தேசிய உணர்வு குன்றிப்போய்
உள்ளது என்பது நிரூபிக்கப் படுகிறது.


ஒரு பயலும் எதிர்க்கவில்லை!
===============================
பல்கலையில் சோதிடம் வந்தபோது, அறிவியல்
அமைப்புகள் மட்டுமே அதை எதிர்த்தன. நியூட்டன்
அறிவியல் மன்றம் எதிர்ப்பில் முன்னணியில்
இருந்தது. அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை.
மிகப்பல அரசியல் தலைவர்கள் சோதிடப் பித்தர்களே.

சோதிடத்தை நாங்கள் எதிர்த்தோம்; எதிர்த்து
முறியடித்தோம்; சோதிடத்துக்கு எதிராக
இயக்கம் நடத்தினோம்; தர்ணா, ஆர்ப்பாட்டம்,
உண்ணாவிரதம், பல்கலைக்கழக முற்றுகை,
மத்திய அரசு அலுவலக முற்றுகை, சாலை மறியல்,
சோதிட எதிர்ப்புப் பேரணி, சோதிட எதிர்ப்பு
மனிதத் சங்கிலி ..... இப்படி எந்தப்
போராட்டத்தையாவது எந்தக் கட்சியாவது
முன்னெடுத்ததா? கிடையாது.

 திமுக, மதிமுக கட்சிகள் வாஜ்பாய் அரசில்
அமைச்சர்களாக இருந்தன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக