செவ்வாய், 26 ஏப்ரல், 2016

தேர்தல் ஆணையத்தின் மூடத்தனமும்
மக்கள் விரோதக் கட்டுப்பாடுகளும்!
---------------------------------------------------------------------
1) இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் கூட்டமும்
பரப்புரையும் கூடாது என்பது சரியல்ல.
மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நகர்ப்புறங்களில்
மட்டும் இதைச் செயல்படுத்தலாம். சகட்டுமேனிக்கு
கிராமப்ப்புறங்களிலும் இதைச் செயல்படுத்துவது
மூடத்தனம். கிராமங்களில் ஊர்த் திருவிழாவின்
கலை நிகழ்ச்சிகள், கதா காலட்சேபங்கள்,
இராமாயண உபந்நியாசங்கள் இவையெல்லாம்
இரவு நேரங்களில் நிகழ்வதுதான் நமது பண்பாடு.

2) சுவர் எழுத்துக்களைத் தடை செய்ததால் தங்கள்
தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரைக்கூட
மக்கள் அறிந்து கொள்ள முடியவில்லை.

3) ஆரத்தி எடுத்தால் தட்டில் காசு போடுவது
இந்த மண்ணின் பண்பாடாக உள்ளது.
வாக்காளர்கள் அத்தனை பேரும் வேட்பாளருக்கு
ஆரத்தி எடுக்கப் போவதில்லை. இதை தடுப்பது
படுமூடத்தனம்.

4) தேர்தல் ஆணையத்தின் அர்த்தமற்ற கட்டுப்பாடுகளால்
தங்கள் கொள்கையைச் சொல்லி வாக்குக் கேட்க
முடியாது என்ற நிலைக்கு அரசியல் கட்சிகள்
தள்ளப் படுகின்றன. எனவே வாக்காளர்களுக்கு
பணம் கொடுத்து வாக்குக் கேட்பது என்ற
பாதையைத் தேர்ந்து எடுக்கின்றன.

5) அரசியல் கட்சிகளின் இந்த சீரழிவுக்குத் தேர்தல்
ஆணையத்தின் மூடத்தனமான கட்டுப்பாடுகளும்
ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
********************************************************************
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக