வெள்ளி, 29 ஏப்ரல், 2016

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் நிரப்பப்
படுவதில்லை; விற்கப் படுகின்றன. ஒரு கோடி
ரூபாய் கொடுத்து ப்ளஸ் டூவில் வெறும் 50 சதம்
மதிப்பெண்கள் எடுத்த பையனுக்கு MBBS இடம்
கிடைக்கிறது. தற்போதைய தீர்ப்பின் மூலம்
இந்தப் பையன் NEET தேர்வை எழுத வேண்டும்.
எழுதித் தேறினால்தான் இடம் கிடைக்கும்.
அவனால் ஒருநாளும் இந்தத் தேர்வை எழுதித்
தேற முடியாது.
**
இதன் விளைவாக தனியார் மருத்துவக் கல்லூரி
நிர்வாகம் கோடி கோடியாகக் கொள்ளை அடிக்க
முடியாது. எனவே தனியார் மருத்துவக் கல்விக்
கொள்ளையர்கள் இதை எதிர்க்கிறார்கள். உச்ச நீதி
மன்றத்தின் தீர்ப்பு சுயநிதிக் கொள்ளையர்களின்
கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதே. இதை
எப்படி வரவேற்காமல் இருக்க இயலும்?


பல்லாயிரம் ஆண்டு காலமாக நின்று நிலைத்து
நீடித்துக் கொண்டிருக்கும் சாதியை ஒழிக்கிற
அல்லது பலவீனப் படுத்துகிற பெரும் பொறுப்பை
திரு மு க ஸ்டாலின் அவர்களின் தோள்களில்
சுமத்துவது எப்படிச் சரியாகும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக