புதன், 27 ஏப்ரல், 2016

மருத்துவ நுழைவுத் தேர்வு!
மாணவர்களுக்கு வேண்டுகோள்!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
உச்சநீதி மன்றம் இந்த ஆண்டே மருத்துவ நுழைவுத்
தேர்வை நடத்த வேண்டும் என்று தீர்ப்புக் கூறி உள்ளது.
நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால் இந்த ஆண்டு
நடத்த இயலாது என்று மத்திய அரசும் மருத்துவ
கவுன்சிலும் முன்வைத்த வாதத்தை மேதகு
நீதியரசர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

நாளை தேர்வுக்கான கால அட்டவணை இறுதி
செய்யப்பட்டு விடும்.

நுழைவுத் தேர்வு சரியா தவறா என்றெல்லாம்
விவாதித்துக் கொண்டிருக்க இப்போது நேரமில்லை.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இறுதியானதும்
கட்டுப்படுத்தக் கூடியதும் (final and binding) ஆகும்.

எனவே மாணவர்கள் அனைவரும் நுழைவுத் தேர்வுக்கு
உடனடியாகத் தயாரகும் விதத்தில் பாடங்களைப்
படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துமாறு
நியூட்டன் அறிவியல் மன்றம் கேட்டுக் கொள்கிறது.
********************************************************************* 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக