சனி, 16 ஏப்ரல், 2016

பிரேமலதாவின் வாய்க்கொழுப்பு!
தேர்தல் ஆணியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
---------------------------------------------------------------------------------
வைகோவின் வாய்க்கொழுப்பு அடங்கி முடிந்ததுமே
பிரேமலதா தன் வாய்க்கொழுப்பை வெளிப்படுத்தி தனது
தரங்கெட்ட தன்மையை தமிழ்நாட்டிற்கு உணர்த்தி உள்ளார்.

கடையநல்லூரில் மணிக்கூண்டு அருகே 15.04.2016 வெள்ளி
இரவு 8 மணிக்கு தேமுதிக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்
பிரேமலதா. அப்போது, "ஈராக் நாட்டின் சர்வாதிகாரியான
சதாம் உசேன் இழிவாகச் செத்தான். அதே போல் கருணாநிதியும்
ஜெயலலிதாவும் சாவார்கள்" என்றார்.

குடித்து விட்டுப் பேசுபவர் என்ற பெயர் விஜயகாந்த்துக்கு
இருக்கிறது. தற்போது பிரேமலதாவும் குடித்து விட்டுப்
பேசுகிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

தமிழகத் தேர்தல் வரலாற்றில், நிகழ்த்தப்பட்ட வெறித்தனமான
அருவருக்கத்தக்க பேச்சாக பிரேமலதாவின் இக்கீழ்த்தரமான
பேச்சு பதிவு செய்யப் படுகிறது.

இதுபோன்ற பேச்சுக்கு பிரேமலதா தண்டிக்கப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
கட்டுத்தொகை பறிபோய்விடும் என்ற உண்மை கண்முன்
தெரிவதால், போதையில் அறிவிழந்து பேசும் பிரேமலதா
போன்ற கழிசடைகள் சமூகப் பதட்டத்தை ஏற்படுத்த
முயல்வதை தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது.  
----------------------------------------------------------------------------------------------------------
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக