வியாழன், 14 ஏப்ரல், 2016

அறிவியல் வழி நிரூபணமே இப்போதைய தேவை!
----------------------------------------------------------------------------------
மறைமலை அடிகள் தலைமையில், முத்தமிழ்க் காவலர்
கி ஆ பெ விசுவநாதன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் ஒன்றுகூடி,
விவாதித்து, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று
முடிவெடுத்தனர். அம்முடிவை முத்தமிழறிஞர்
கலைஞர் ஏற்றுச் சட்டம் செய்தார்.
**
இவ்வளவுக்கும் பின்னர் இதில் யான் தலையிட்டுச்
சொல்வதற்கு எதுவும் இல்லை. மறைமலை அடிகளை விட,
கி ஆ பெ விசுவநாதன் அவர்களை விட, கலைஞரை விட
யான் தமிழறிஞன் இல்லை.
**
அவர்கள் கூறியதற்கு மேல் யான் கூற முற்படுவது,
ஏற்கனவே நீர் நிறைந்துள்ள குடத்துள் மேலும் நீரை
ஊற்றுவது போல் அமையும்.
**
எனவே தமிழ் மரபு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை
சார்ந்து இதில் பேசுவதை அறவே தவிர்க்கிறேன். நவீன
அறிவியல் என்ன கூறுகிறது என்பதை மட்டுமே
இக்கட்டுரையில் சான்றுகளுடன் எடுத்துக் காட்ட
விரும்புகிறேன்.
**
இது நியூட்டன் அறிவியல் மன்றம் எழுதுகிற கட்டுரை.
அறிவியல் வழியில், சித்திரை புத்தாண்டு அல்ல என்பதை
நிரூபிக்கிற கட்டுரை. எனவே கணிதமும் அறிவியலுமே
இக்கட்டுரையின் அடிப்படைகள். அவற்றைத் தவிர்த்து
விட்டு இக்கட்டுரையை எழுத இயலாது. இதை வாசகர்கள்
கணக்கில் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக