சனி, 30 ஏப்ரல், 2016

1) இந்தப் பதிவுக்குப் பிறகு இரண்டு கட்டுரைகள்
விளக்கமாக எழுதப் பட்டுள்ளன. அருள்கூர்ந்து
அவற்றைப் படிக்குமாறு வேண்டுகிறேன்.
**
2) இந்தியா முழுவதும் இதுவரையிலான எல்லா
நுழைவுத் தேர்வுகளையும் உச்சநீதிமன்றம் ரத்து
செய்து விட்டது. மாநில அரசுகளோ, தனியார்
சுயநிதிக் கல்லூரிகளோ, நிகர்நிலைப் பல்கலைகளோ
இனி யாரும் எந்த நுழைவுத் தேர்வையும் நடத்த
முடியாது. 
**
3) இனி  ஒரே ஒரு நுழைவுத் தேர்வுதான். அதன் பெயர்
NEET.
**
4) இந்த நுழைவுத் தேர்வு குறித்த விவாதம்
கல்வித்துறை சார்ந்த குறிப்பாக மருத்துவக்
கல்வி சார்ந்த விஷயங்களில் ஒரு ஆழமான
பரிச்சயத்தைக் கோருகிறது. அப்போதுதான்
இதில் உள்ள நுட்பங்களை, சிக்கல்களை,
எதிர்கொள்ள வேண்டிய சவால்களைப் புரிந்து
கொள்ள முடியும். அருள்கூர்ந்து இந்தப்
பதிவுக்குப் பின் எழுதப்பட்ட பதிவுகளைப்
படிக்கவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக