சனி, 23 ஏப்ரல், 2016

கொளத்தூரார் அறிக்கையை வெளியிட்ட உங்கள்
தோழர் அதில் உள்ள பத்தி-2, பத்தி-3 ஆகியவற்றை
வெளியிடாமல் பத்தி-1ஐ மட்டும் வெளியிட்டு
நிறுத்திக் கொண்டார். அதற்கு மறுமொழியாக அன்று
எழுதப்பட்ட பதிவு இது. நிற்க.
**
எக்காரணம் கொண்டும்  சமூகத்தைப் பின்னுக்கு
இழுக்கும் அதிமுகவின் ஆட்சி தொடர அனுமதிக்கக்
கூடாது என்ற சரியான நிலைபாட்டை எடுத்த
கொளத்தூரார், அதிமுகவை ஆட்சிக்கு வர விடாமல்
தடுக்கும் ஆற்றல் கொண்டது திமுகவே என்று
சரியாகக் கணிக்கும் கொளத்தூரார், தான் எடுத்த
முடிவை முழுமையாகச் செயல்படுத்தி இருக்கலாமே.
அதை விடுத்து, சரியானதொரு முடிவை மூளியாக
வேண்டிய அவசியம் என்ன? போலிக் கம்யூனிஸ்ட்கள்
விசிக ஆகியவற்றை 75 தொகுதிகளிலும், மீதியில்
திமுகவையும் ஆதரிப்பது என்ற முடிவு தர்க்க
விரோதமானது.
**
ஆழ்ந்து சிந்தித்து வந்தடைந்த முடிவுகளுக்கு நேர்
எதிரான செயல்பாட்டைப் பரிந்துரைப்பது எந்தத்
தர்க்கத்திலும் அடங்கவில்லையே. ஈழ விடுதலையை,
தனி ஈழத்தை ஏற்றுக் கொள்ளாத போலிக்
கம்யூனிஸ்டுகளை ஆதரிப்பதற்குப் பதில்
பாஜகவையே ஆதரிக்கலாமே.    , 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக