வியாழன், 21 ஏப்ரல், 2016

கம்யூனிஸ்ட் கட்சியில் கருத்து வேறுபாடு!
மார்க்சிஸ்ட் கட்சி மத்தியஸ்தம்!
----------------------------------------------------------------
கிரானைட் மாபியாவும் கொலை, கொள்ளை
உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களைப் புரிந்து
முன்மாதிரி  கம்யூனிஸ்டாகத் திகழும்
தளி தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரன் அவர்களுக்கு
காரல் மார்க்ஸ் விருது வழங்கி கௌரவிக்க  வேண்டும்
என்று தா பாண்டியன் தீவிரம் காட்டி வருகிறார்.

ஆனால் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களோ
தளி ராமச்சந்திரனுக்கு லெனின் விருது வழங்கி
கௌரவிப்பதுதான் சரியானது என்று உறுதிபடக்
கூறி விட்டார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்கள்
இருவருக்கிடையில் இவ்வாறு தீவிரமான கருத்து
வேறுபாடு ஏற்பட்டு இருப்பது குறித்து தோழமைக்
கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி பெரிதும் கவலை
கொண்டுள்ளது. ஒரு சமரசத் தீர்வாக, தளி ராமச்சந்திரனுக்கு
சேகுவேரா விருது வழங்கி கௌரவிக்கலாம் என்று
ஆலோசனை கூறி உள்ளதாம்.

இன்குலாப் ஜிந்தாபாத்!
தளி ராமச்சந்திரன் ஜிந்தாபாத்!!
***************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக