வெள்ளி, 29 ஏப்ரல், 2016

தாக்கல் செய்த மனுவின் Prayer பகுதியில் என்ன
உள்ளதோ, அதை மட்டுமே பரிசீலித்துத் தீர்ப்பு
அளிக்கும் நீதிமன்றம். நீதிமன்றத் தீர்ப்பைத்
தொடர்ந்து மத்திய அரசும் மருத்துவக் கவுன்சிலும்
எமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களைச்
செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசை மக்கள்
வலியுறுத்த வேண்டும்.
**
ஒரே ஒரு நீதிமன்றத் தீர்ப்பு சர்வரோக நிவாரணி
ஆகி விடாது. தீர்ப்பு ஏற்படுத்தி உள்ள சாதகமான
சூழலைப் பயன்படுத்தி, அரசு நடவடிக்கை
எடுக்கும்போதுதான் முழுமையான தீர்வு கிட்டும்.
அரசை வலியுர்த்துவது மக்கள் கடமை.

1) தனியார் கல்லூரி இடங்களுக்கு மட்டும்
பொது நுழைவுத் தேர்வு என்று செயல்படுத்த
முடியாது. இது தெளிவான பாரபட்சம் (clear discrimination)
என்று நீதிமன்றம் சென்று அதை ரத்து செய்து விடுவார்கள்.
2) எய்ம்ஸ், ஜிப்மர் ஆகியவை தனிச் சட்டத்தின்படி
உருவாக்கப் பட்டவை. பிரத்தியேகச் சட்டங்கள்
கொண்டு வருவதன் மூலமாகவே அவற்றையும்
NEETஇல் இணைக்க முடியும்.   


ஜிப்மர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உண்டாக்கப்
பட்டது. எனவே அதையும் NEETஇல் உள்ளடக்க
தனிச்சட்டம் தேவை என்று கருதுகிறேன். எனினும்
இதற்கு சட்ட நிபுணர்களே தெளிவான விளக்கம்
சொல்ல முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக